'விக்ரம்' படத்தில் ஏற்கனவே 3 ஹீரோக்கள், கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 ஆவது வில்லனாக நடிக்க உள்ள ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
'விக்ரம்' படத்தில் ஏற்கனவே 3 ஹீரோக்கள், கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 ஆவது வில்லனாக நடிக்க உள்ள ஹீரோ குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் 'விக்ரம்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுதியாகவே உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, வெறித்தனமாக வெளியான டீசர் என்றும் கூறலாம். அரசியலில் பிசியாக இருந்த கமல்ஹாசன், தன்னுடைய கட்சி... சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், அரசியல் வேலைகளை, கவனித்து கொண்டே... திரைப்படத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தயாராகியுள்ளார்.
எனவே கொரோனா இரண்டாவது அலை, தணிந்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்க்கு முன்னர் 'பாபநாசம் 2 ' படத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் பரபரப்பாக நடந்து வருகிறது.
எனினும் மற்றொரு புறம், கமல் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் பணியிலும் லோகேஷ் கனகராஜ் மிகவும் தீவிரமாக உள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நான்கு ஹீரோக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி, பகத் பாசில், மற்றும் அர்ஜுன்தாஸ்ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில். தற்போது நான்காவதாக 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'கைதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் நரேன் வில்லனாக நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பது குறித்து நரேன் கூறியுள்ளதாவது, 'விக்ரம்' படத்தில் எனது கேரக்டர் மிகவும் சுவாரசியமானது என்றும் என்னுடைய கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு, அந்த கனவு தற்போது நிறைவேறுவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய காட்சிகள் ஆகஸ்ட் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக நடிகர் நரேன் தெரிவித்துள்ளார்.