பெப்சி ஊழியர்கள் பசி தீர்க்க குவியும் உதவிகள்... அள்ளி கொடுத்த விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தாணு!

Published : Mar 24, 2020, 03:28 PM IST
பெப்சி ஊழியர்கள் பசி தீர்க்க குவியும் உதவிகள்... அள்ளி கொடுத்த  விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், தாணு!

சுருக்கம்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

31 ஆம் தேதி வரை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், திரையுலகில் அன்றாட பணிகள் செய்து குடும்பத்தை ஓட்டி வரும் ஆயிரனக்கான பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மிகவும் உருக்கமான அறிக்கை வெளியிட்ட பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, கஞ்சி உணவாவது அவர்களுக்கு வழங்க திரையுலகை சேர்ந்தவர்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது பெப்சி தொழிலாளிகளின் பசியை போக்க, பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே, நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்தின் சார்பாக ரூ.10 லட்சம் அளித்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு உதவிகள் குவிந்தவண்ணம் உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதே போல் நடிகர் பிரகாஷ் ராஜ் 100 மூட்டை அரிசியும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு 150 மூட்டை அரிசியையும் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?