தமிழக பாராளுமன்ற தேர்தல்! விஜய் சேதுபதியின் புது முயற்சி!

Published : Mar 12, 2019, 03:25 PM IST
தமிழக பாராளுமன்ற தேர்தல்! விஜய் சேதுபதியின் புது முயற்சி!

சுருக்கம்

தமிழக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான, சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைவரும் தவறாமல் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது.  

தமிழக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான, சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைவரும் தவறாமல் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரம் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய்சேதுபதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த விளம்பர படத்தில் விஜய்சேதுபதி கூறியதாவது:

நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? இவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடும் முன் தெளிவாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள், முக்கியமாக ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இதே விளம்பரப்படத்தில் நடிகர் விவேக்கும் ஓட்டு போடுவதன் அவசியத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய்சேதுபதி தோன்றும் இந்த தேர்தல் ஆணையத்தின் விளம்பர படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?