ஐந்து முன்னனி இயக்குனர்களுடன் இணையும் விஜய்சேதுபதி.....!!!

 
Published : Nov 04, 2016, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
 ஐந்து முன்னனி இயக்குனர்களுடன் இணையும் விஜய்சேதுபதி.....!!!

சுருக்கம்

இந்த ஆண்டில் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 6 திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விரைவில் அவர் நடித்த 'புரியாத புதிர்' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

இந்நிலையில் 'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது.இந்த தகவலால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லியோ பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜன நாயகன்.... முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி...!
கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு