Valimai : ரிட்டயர்ட் இன்ஸ்பெக்டருக்காக எழுதப்பட்ட "வலிமை அம்மா பாடல்" ; எமோஷன் ட்வீட் செய்த விக்னேஷ் சிவன் !!

By Kanmani PFirst Published Dec 6, 2021, 10:57 AM IST
Highlights

Valimai second single :  தன்னுடைய அம்மாவுக்காகவே வலிமை செகண்ட் சிங்கிள் பாடலுக்கான வரிகளை தீட்டியதாக  விக்னேஷ் சிவன்  கூறியுள்ளார்.

அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள். இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித்.

வலிமை படபிடிப்பு முழுதும்  சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் - பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.

இதை தொடர்ந்து தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதற்கிடையே  இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான்  அஜித் திரும்பி வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினர். சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடும் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.  

இதற்கிடையே வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிளாக "நாங்க வேற மாறி " சாங் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டடித்தது. இந்த பாடலை தல ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வந்தனர். இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது. 

ஏற்கனவே தயாரிப்பாளர் கூற்றுப்படி வலிமை வரும் ஜனவரியில் ரிலீஸாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் வலிமை படத்தின் பாடல்கள், டீசர்,டிரெயிலர் என மாஸ் அப்டேட் கிடைக்கும் என்னும் உற்சாகத்தில் இருக்கும் தல விருந்தாக கடந்த வாரம் வலிமை செகண்ட்  சிங்கிளுக்கான ப்ரோமோவை  படக்குழு வெளியிட்டிருந்தது.

 

அதன்படி நேற்று (டிசம்பர் 5) மாலை 6:30 மணிக்கு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடல்  செகண்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் விக்னேஷ் சிவனின் உணர்ச்சிகரமான வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில், யுவன்சங்கர்ராஜா இசையில் உருவாகியுள்ளது. இதுகுறித்து  உற்சாகத்தில் திக்குமுக்காடி வரும் ரசிகர்கள் வலிமை செகண்ட் சிங்கிளை வைரலாக்கி வருகின்றனர். 

 

இந்நிலையில் இந்தப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ள இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ரிட்டயர்ட் இன்ஸ்பெக்டரான தன்னுடைய அம்மா மீனா குமாருக்காகவே வலிமை செகண்ட் சிங்கிள் பாடலுக்கான வரிகளை தீட்டியதாக கூறியுள்ளார். 

 

https://t.co/WNQogBk9Yz

Dedicated to Dear
Retd. Inspector of police ❤️❤️🥰🥰my meee!

AlwAys wished I could write one amma song😢

Can I be blessed beyond this? To write a song with music in a H vinoth film starring the one & only Ajith sir😇 pic.twitter.com/M4hxFdcpkE

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் மலர அடித்தளமிட்ட நானும் ரவுடி தான் படத்தின் கதை உண்மையில் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டராக விக்னேஷ் சிவனின் அம்மா மீனா குமாருடனான அனுபவத்தை மையமாக வைத்தே விக்னேஷ் சிவன் உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!