Maanaadu |"மாநாடு" மாஸ் ரோல் வாய்ப்பை இழந்த பிரபலம்; இந்த ரோலில் ரோஜா நாயகன் ?;வெங்கட் பிரபுவின் பகிர் பதில்!!

By Kanmani PFirst Published Nov 27, 2021, 1:13 PM IST
Highlights

Maanaadu | மாநாடு படத்தில் எஸ்.ஏ சூர்யா நடித்துள்ள காவல் அதிகாரி  ரோலுக்கு ரோஜா பட பிரபல நடிகரை தான் முதலில் புக் செய்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 

ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த மாநாடு ஒருவழியாக ஆனால் கடந்த 25-ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பான மாநாடு திரையரங்குகளில் அதிரடி காட்டி வருகிறது.

நீண்ட நாள் கழித்து சிம்புவின் மாஸ் என்ட்ரியான இந்த படம் டைம் லூப் என்னும் கான்சப்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ் பிஜிம், வழக்கமான பில்டப் இன்மை என சிம்பு படத்திற்கான எந்த வித அலட்டலும் இல்லாமல் வெளியாகியுள்ள இந்த படம் சிலம்பரசனின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. 

இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவிற்கு ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சூர்யா என பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மாநாடு குறித்து வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள காவல் அதிகாரி கதாப்பாத்திரம் குறித்து பல நல்ல விமர்சனங்கள் உலாவி வருகின்றன. இது குறித்து எஸ்.ஜே சூர்யாவிற்கு பாராட்டு குவிந்து வருகிறது. இவ்வாறு இருக்க எஸ் ஜே சூர்யா நடித்துள்ள  கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பிரபல நடிகர் அரவிந்தசாமியைத்தான் படக்குழு அணுகியுள்ளனர். அவருக்கான வசனங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்க நீண்ட இடைவெளி ஆனதால் அரவிந்த்சாமி இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யாவை அணுகியுள்ளார் வெங்கட்பிரபு,  கதையை கேட்டதும் அடுத்த நிமிடமே ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து தனி தோரணையுடன் வசங்களை பேசும் எஸ் ஜே சூர்யாவிற்கு ஏற்ற வகையில் டைலாக்குகளை மாற்றி அமைக்கம் முற்பட்டுள்ளார் இயக்குனர். ஆனால் எந்த மாற்றமும் தேவையில்லை என கூறி அரவிந்த்சாமிக்கு எழுதிய வசனங்களை தனது மாடுலேஷனுக்கு ஏற்ப மாற்றி எஸ்ஜே சூர்யா நடித்து அசத்தினார் என குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு. 

click me!