மறுபடியுமா?... கழுத்தில் தாலியுடன் செல்ஃபி வெளியிட்ட வனிதா... ஷாக்கான ரசிகர்கள்!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 18, 2021, 6:34 PM IST
Highlights

மீண்டும் வெள்ளை நிற புடவையில் கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பீட்டர் பால் விவகாரம் மூலம் வனிதா விஜயகுமார் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறினார். அந்த பப்ளிசிட்டி இன்று வரை தொடர்ந்து வருகிறது. பீட்டர் பாலை பிரிந்த கையோடு சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது. 

தற்போது வனிதா விஜயகுமார் வரிசையாக பல படங்களில் கமிட்டாகியுள்ளதால், ஷூட்டிங்கில் செம்ம பிசியாக உள்ளார். சோசியல் மீடியாவில் தான் நடித்து வரும் படங்கள் குறித்த அப்டேட்களோடு, அவ்வப்போது எதையாவது கொளுத்திப்போட்டும் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலையும், கழுத்துமாக பவர் ஸ்டாருடன் வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பதும் பின்னர் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

பலரும் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்ததால் கடுப்பான வனிதா, சக நடிகர், நடிகைகள் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டால், அது வேலை விஷயமாக இருக்க கூடாதா? , நான் நான்கு திருமணம் அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என காரசரமாக பதிலளித்தார். 

தற்போது மீண்டும் வெள்ளை நிற புடவையில் கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே பிக்கப் ட்ராப் ஷூட்டிங்கில் பங்கேற்றிருப்பதையும் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் சில குறும்புக்கார நெட்டிசன்கள் வேண்டுமென்றே மறுபடியுமா? என ஒற்றை வார்த்தையில் கமெண்ட் செய்து வனிதாவை கலாய்த்துள்ளனர். 

click me!