
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அபிராமி, தலைவியாக பொறுப்பேற்றது முதல், அவருடைய கடமையை நன்றாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் அபி. ஆனால் படபடப்பு மற்றும் சரியான புரிதல் இல்லாமல் ஒரு சில தவறுகளை செய்து மாட்டி கொள்கிறார்.
அந்த வகையில், நேற்று அபிராமி மதுமிதாவிடம் சென்று அவருடைய பிரச்சனை என்ன என்பது குறித்து பேசினார். அப்போது மதுவிடம் அபிராமியே பழைய விஷயங்களை பேசி, மீண்டும் பிரச்னையை துவங்கினார். மேலும் பர்சனலாக பேசிய விஷயத்தை அனைவரிடமும், கொஞ்சம் மாற்றி கூறியதால் பிரச்சனை பெரிதாக அனைவருக்கும் மது மீது மீண்டும் கோபம் எழுந்தது.
பின் வனிதா இது குறித்து நேரடியாகவே மதுமிதாவிடம் பேசிய போது, அவர் மேல் தவறு இல்லை என்று உறுதியானது. எனினும் இப்படி மாற்றி பேசி விட்டு, மதுவிடம் அபிராமி பேசுவதால் வனிதா அபிராமி பச்சை துரோகம் செய்து விட்டார் என வாயிக்கு வந்தது எல்லாம் பேசுகிறார். இந்த பிரச்சனை எங்கு சென்று முடியும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.