டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி விவகாரத்து கேட்டு மனு … அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

First Published Dec 20, 2017, 9:50 AM IST
Highlights
TV anchor Divyadarshini applied for divorse


விஜய் தொலைக்காட்சியின்  தொகுப்பாளினி டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடம் இருந்த விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய்  தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

நம்ம வீட்டு கல்யாணம்,  காஃபி வித் டிடி  போன்ற நிகழ்சிகளை சுவாராஸ்யமாக தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2104 ஆம் ஆண்டு டிடிக்கும் அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

இதையடுத்து டிடி மற்றும்  ஸ்ரீகாந்த ரவிச்சந்திரன் ஆகியோர்  எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.

click me!