
ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கலை கடைசி தினமான நேற்று சமர்பித்தார்.
ஆனால்,அதில் முன்மொழிந்தவர்களின் பெயர்களில் இரண்டு நபர்களின் பெயர்கள் போலி கையெழுத்தாக உள்ளது என காரணம் காட்டி அவருடைய மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்
இதற்கு முன்னதாக விஷாலுக்கு எதிராக,அவர் பதவி விலக வேண்டும் என கூறி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இயக்குநர் சேரன் மற்றும் மற்ற தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
இந்நிலையில் சேரனுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர் டி.ராஜேந்தர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்? என்றும்,கடந்த எட்டு மாத காலத்தில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியும் அவர் செய்ய வில்லை என அடுக்கடுக்காக வசன மொழியில் தன் எதிர்ப்பை தெரிவித்தார்
மேலும் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்துகொண்டு,அரசுக்கு எதிராக தேர்தலில் நிற்பதால் அரசு சார்பில் எந்த உதவியையும் தயாரிப்பாளர் பெற முடியாது என குற்றம் சாட்டினார்
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,டி.ராஜேந்தரின் மகன் சிம்பு நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுடன் போட்டியிட்டு தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையெல்லாம் மனதில் வைத்து தான் திடீரென களத்தில் குதித்து உள்ளார் டிஆர் என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.