
தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்? என்று நடிகர் டி.ராஜேந்தர் நறுக்குனு கேள்வி கேட்டுள்ளார்.
நடிகர் விஷால் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதனைக் கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர் டி.ராஜேந்தர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக என்ன செய்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் ஒருவர் அரசியலில் போட்டியிட்டால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு எப்படி மானியம் வழங்கும்” என்றும் கேட்டார்.
இந்த நிலையில், விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பட்டது. உடனே விஷால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டர். பின்னர், அவரின் ஆட்சேபனை மனு ஏற்கப்பட்டு அது விசாரிக்கப்பட்டது என்பதும் விசாரணைக்கு பிறகு விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்பதும் நினைவு கூரத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.