இதுவே என் பிறந்தநாளுக்கு நீங்க தரும் அன்பு பரிசாக இருக்கும்..! நடிகர் கார்த்தி வைத்த வேண்டுகோள்..!

By manimegalai aFirst Published May 25, 2021, 1:30 PM IST
Highlights

நடிகர் கார்த்தி, இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கார்த்தி மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

நடிகர் கார்த்தி, இன்று தன்னுடைய 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கார்த்தி மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த வேண்டுகோள் அறிக்கை தற்போது வைரலாகி பார்க்கப்பட்டு வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் நடிகர் கார்த்தி தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள், தடுப்பூசி, ஆச்சிஜன் செறிவூட்டிகள், போன்றவை வாங்க தமிழக முதல்வர் நிதி வேண்டி அறிக்கை வெளியிட்ட போது, நடிகர் கார்த்தியின் குடும்பத்தினர் முதல் ஆளாக வந்து ரூ.1 கொடிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!