'தெறி' படத்தில் தவழும் குழந்தையாக நடித்த பாப்பாவா இது? இவ்வளவு பெருசா வளந்துட்டாங்க!

By manimegalai aFirst Published Aug 23, 2019, 12:32 PM IST
Highlights

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படம் 'தெறி'. காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி இருந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த முதல் திரைப்படம் 'தெறி'. காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி இருந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும், எமிஜாக்சன், சுனேனா, ராதிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில், மறைந்த பிரபல இயக்குனர் மகேந்திரன், வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

இந்த படத்தில் தான், பிரபல நடிகை மீனாவின் மகள், நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. அம்மா 8  அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபித்திருந்தார் பேபி நைனிகா.

இதே படத்தில், நைனிகாவின் குழந்தை பருவ கதாப்பாத்திரத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஒரு பெண் குழந்தை. குறு குறு பார்வை, மழலை சிறப்பு என ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் தற்போது எப்படி உள்ளார் என்கிற புகைப்படம் வெளியாகி, ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மிகவும் சிறு குழந்தையாக இருந்த இவர், நான்கு வயது குழந்தையாக வளர்த்துள்ளார். 

அந்த புகைப்படம் இதோ ;

click me!