யாஷிகாவுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி..! தயாரிப்பாளர்கள் முடிவால் ஏற்பட்ட புதிய சிக்கல்..?

By manimegalai aFirst Published Aug 1, 2021, 5:51 PM IST
Highlights

தற்போது யாஷிகா நடிக்க கமிட் ஆகி இருந்த படங்களில், வேறு நடிகைகளை வைத்து படம் இயக்கலாமா? என தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 24ம் தேதி யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழி மற்றும் நண்பர்களுடன்  மாமல்லபுரம் அருகேயுள்ள ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாடிவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது, நள்ளிரவு ஒரு மணி அளவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற இடத்திற்கு யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் அவருக்கு இடது பக்கத்தில் அமர்ந்து சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த தோழி வள்ளி செட்டி பவானி என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். பின் இருக்கையில் அமர்ந்திருந்தது யாஷிகாவின் ஆண் நண்பர்கள் சையது மற்றும் அமீர் ஆகியோர் பலத்த காயங்களுடன் அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்களுக்கு யாஷிகாவை விட மிக குறைவான காயங்கள் ஏற்ப்பட்டது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: 'சார்பட்டா' நடிகை சஞ்சனாவா இது? ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் விதவிதமாக புடவை கட்டி சிலிர்க்க வைத்த கிளிக்ஸ்..!
 

அதே நேரத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு, கால், கை, முதுகு, போன்ற பகுதிகளில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில்... அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, உயிருக்கு சேதம் விளைவித்தது என மூன்று வழக்குகள் யாஷிகா மீது தொடரப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யாஷிகா... நேற்றைய தினம் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என செய்திகள் வெளியானது.

மேலும் செய்திகள்: 'மாரியம்மாள்' கேரக்டரில் இருந்து மீள முடியாத துஷாரா! இயங்குனர் பா.ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
 

மேலும் இன்னும் ஒரு அறுவை சிகிச்சை உள்ளதாகவும் அது முடிந்த பின்னர் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், யாஷிகா பூரண குணமடைந்து எழுந்து நடக்க... 8  மாதத்தில் இருந்து 1 வருடம் கூட ஆகலாம் என்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இதனால் தற்போது யாஷிகா நடிக்க கமிட் ஆகி இருந்த படங்களில், வேறு நடிகைகளை வைத்து படம் இயக்கலாமா? என சில தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவருக்கு மேலும் அதிர்ச்சி தருவது போல் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: நண்பர்களுடன் வீடியோ கால் பேசிய தளபதி விஜய்..! ஃபிரெண்ட்ஷிப் டேவில் வைரலாகும் புகைப்படம்..!
 

மேலும் செய்திகள்: அடங்காத ரங்கசாமி& கோ..!! சார்பட்டா ரங்கன் வாத்தியாராக மாற்றப்பட்ட காமராஜர்..!! புதுவை கலாட்டா..!!
 

ஆனால் இது குறித்து இது வரை எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளியவில்லை. அதே நேரத்தில் தற்போது யாஷிகா இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வந்ததாகவும், சில படங்களை நடித்து கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.   

click me!