பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வை வீட்டுக்கு அழைத்து பேசிய பிரபல இயக்குநர்…

First Published Oct 17, 2017, 9:52 AM IST
Highlights
The famous director of the big bass titled Whinner Arrow home ...


பிக்பாஸில் வெற்றிப் பெற்ற ஆரவ்வை வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம். உடன் அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசியும் இருந்தார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் போட்டியாளர்களும் மக்களுக்கு நன்கு பிரபலம் ஆகிவிட்டனர்.

இதனையடுத்து பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் விளம்பர மற்றும் பட வாய்ப்புகளும் வந்து குவியும் வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவை, இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார்.

மணிரத்னம் படத்தில் ஆரவ் நடிக்கிறாரா? அல்லது நட்பு ரீதியான ஒரு சந்திப்பா? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்.

அது என்ன நட்பு ரீதியான சந்திப்பு என்று கேட்கிறீர்களா?

துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் ‘ஓகே கண்மணி’. இந்தப் படத்தில் பிக் பாஸ் ஆரவ் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நடித்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிவிட்டார் என்பது கொசுறு தகவல்.

tags
click me!