சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்? இயக்குனர் பா.இரஞ்சித் கொடுத்த அசத்தல் அப்டேட்

Published : Dec 27, 2023, 12:24 PM IST
சென்னையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி எப்போது ஆரம்பம்? இயக்குனர் பா.இரஞ்சித் கொடுத்த அசத்தல் அப்டேட்

சுருக்கம்

பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலிக்கும் பா.ரஞ்சித், நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல் அவர் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் பண்பாட்டு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். 

அந்த வகையில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்கிற நிகழ்ச்சியை ஆண்டுதோறு நடத்தி வருகிறார் பா.இரஞ்சித். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியாக இதை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. அதன்படி கர்நாடாக மாநிலம் கோலாரில் அமைந்திருந்திருக்கும் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 23-ம் தேதி இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி தொடங்கியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து இதன் இரண்டாவது நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பல்வேறு பாரம்பரிய கலைஞர்களுடன் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் கிருஷ்ணகிரியிலும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னையில் மார்கழியில் மக்களிசை தொடங்க உள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். 

அதன்படி சென்னையில் வருகிற டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எல்லோரும் வாங்க! ஆண்டின் இறுதியை மக்களிசை கலைஞர்களோடு கொண்டாடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் என பா.இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கினார் நடிகர் சூர்யா.... வெளியான அசத்தல் அறிவிப்பு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!
அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!