
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார். 2 ஆண்டுகளுக்கு பின் அவர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா இதுவாகும்.
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டு விஜய்யை பற்றியும், அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் பகிர்ந்துகொண்டனர். இதையடுத்து இறுதியாக மேடை ஏறி பேச வந்தார் விஜய். அவர் வந்ததும், ஆரவாரம் செய்த ரசிகர்களைப் பார்த்து, விஜய் ரஞ்சிதமே பாடலில் வரும் பாணியில் முத்தம் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... விஜய் தான் சூப்பர்ஸ்டார்.. இந்த பொங்கல் நம்மலோடது! மேடையில் நம்பர்1 நம்பர்1-னு கத்தி அதகளப்படுத்திய தில் ராஜு
இதையடுத்து நெஞ்சில் குடியிருக்கும் என சொல்லி தனது பேச்சை தொடங்கிய விஜய், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, தன்னுடைய போனில் செல்ஃபி வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டு உள்ளது.
அந்த வீடியோவை பதிவிட்டு என் நெஞ்சில் குடியிருக்கும் என்கிற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து தான் தன்னுடையே டிரேட் மார்க் குட்டி ஸ்டோரியை சொல்லி தனது பேச்சை தொடங்க ஆரம்பித்தார் விஜய்.
இதையும் படியுங்கள்... இந்தியாவுக்கு ஆதார் கார்டு எவ்ளோ முக்கியமோ... தளபதி படத்துக்கு பாட்டு ரொம்ப முக்கியம் - தமன் பேச்சு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.