அந்த அளவுக்கு செக்ஸ் அனுபவம் இல்லை... பொசுக்குன்னு பிரபல இயக்குனரை போட்டு தாக்கிய டாப்ஸி!

By manimegalai aFirst Published Aug 8, 2022, 6:29 PM IST
Highlights

பிரபல பாலிவுட் இயக்குனர் தொகுத்து வழங்கி வரும், நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ளவில்லை என நடிகை டாப்ஸியிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அந்த அளவிற்கு செக்ஸ் அனுபவம் இல்லை என கூறியுள்ளார்.
 

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி பண்ணு, தற்போது அவரது நடிப்பில் வெளியாக உள்ள 'டோபரா' படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த ப்ரோமோஷனின் இவர் கலந்து கொண்டபோது, கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் அரட்டை நிகழ்ச்சியான 'காஃபி வித் கரண்'-யில் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்: பார்பி பொம்மை போல்... குட்டை கவுனில் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் மனதை குளிர வைத்த ஹன்சிகா! லேட்டஸ்ட் போட்டோ
 

காரணம் பாலிவுட் திரையுலகில் வெளியாகும் பெரிய நடிகரின் படங்களுக்கு கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ப்ரோமோஷனாக அமைகிறது. அதற்க்கு முக்கிய காரணம் இதில் கேட்கப்படும் சர்ச்சையான கேள்விகள் என்றும் கூறலாம். குறிப்பாக பிரபலங்களிடம் சில அந்தரங்க கேள்விகளை அடுத்தடுத்து கரண் ஜோகர் கேட்டு வருகிறார். எனவே இந்த நிகழ்ச்சி பற்றி தன்னிடம் கேள்வி எழுப்பிய போது, டாப்சி கரண் ஜோஹரை பொசுக்கென அசிங்கப்படுத்துவது போல்,  'காஃபி வித் கரண்' நிகழ்ச்சிக்கு அழைக்கும் அளவுக்கு தனது பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை என்று இயக்குனரை தாக்கி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: இதுவே பெரிய சாதனை தானே... 11 நாள் முடிவில் 'தி லெஜெண்ட்' படம் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?

டைம் டிராவல் குறித்த ஒரு தனித்துவமான கருத்தை முன்வைக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளது 'டோபரா' திரைப்படம்.  2018 ஆம் ஆண்டு வெளியான 'மன்மர்சியான்' படத்திற்குப் பிறகு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், மீண்டும் டாப்சியுடன்  'டோபரா', படத்தில் இணைத்து நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19, 2022 அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

click me!