சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி டுவிஸ்ட்... சிபிஐக்கு மாறியது விசாரணை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 05, 2020, 08:12 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அதிரடி டுவிஸ்ட்... சிபிஐக்கு மாறியது விசாரணை...!

சுருக்கம்

இதனால் ரியா சக்ரபர்த்தியை விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எவ்வித தடையும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். 

இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். 

இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாட்னா போலீசார் தனனி விசாரிக்க கூடாது என்றும், அதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு தரும் படியும் கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரியா சக்ரபர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதனால் ரியா சக்ரபர்த்தியை விசாரிக்க பாட்னா போலீசாருக்கு எவ்வித தடையும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் ரியா சக்ரபர்த்திக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!