இயக்குனர் கே.வி.ஆனந்தால் நிறைவேறிய சூர்யாவின் கனவு இது தானாம்

Asianet News Tamil  
Published : May 11, 2018, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
இயக்குனர் கே.வி.ஆனந்தால் நிறைவேறிய சூர்யாவின் கனவு இது தானாம்

சுருக்கம்

Tamil actor joins with Malayalam star in his upcoming movie

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் ”என்.ஜி.கே” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவரை வெளியாகியிருக்கும் என்.ஜி.கே போஸ்டர்கள் இத்திரைப்படம் குறித்த ரசிகர்களின் ஆவலை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி, ரகுல் பிரீதி சிங் ஆகியோர் சூர்யாவுடன் இத்திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது கே.வி.ஆனந்த் அந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். மோகன் லாலும் ,சூர்யாவும் இணைந்து நடிக்க உள்ள இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த கூட்டணியை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யாவும் தனது கருத்தை கே.வி.ஆனந்திற்கு தெரிவித்திருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு, இதன் மூலம் நிறைவேறியிருப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார். என்.ஜி.கே திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு ,இந்த புதிய திரைப்படம் தொடர்பான வேலைகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!