ஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா...காரணம் இதுதான்...

By Muthurama LingamFirst Published Apr 22, 2019, 3:49 PM IST
Highlights

ஒரே மூச்சில் 35 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த ஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து படப்பிடிப்பை முடித்து வைத்துள்ளார் அவரது கணவரும் படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா

ஒரே மூச்சில் 35 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த ஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து படப்பிடிப்பை முடித்து வைத்துள்ளார் அவரது கணவரும் படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். இதே நிறுவனத்தில் ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஜோதிகா  ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதன் முதல் புராஜக்டை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது.இன்று மதிய உணவுடன் படப்பிடிப்பு முடிய இருந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா படப்பிடிப்புக் குழுவினரை,’நேத்துதான் பூஜை போட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ள படத்தை முடிச்சுட்டீங்களா?’ என்று  அவர்களது அசுர வேகத்துக்காக பாராட்டித் தள்ளினார்.

And it is a wrap for the & starrer in just 35 days! pic.twitter.com/67BNqSxS3y

— 2D Entertainment (@2D_ENTPVTLTD)

click me!