மனைவி படத்திற்காக பாடகராக மாறிய சூர்யா...!!!

 
Published : Jan 30, 2017, 02:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
மனைவி படத்திற்காக பாடகராக மாறிய சூர்யா...!!!

சுருக்கம்

ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்த பிறகு பல வருடம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இந்நிலையில் 2015ம் வருடம் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

36 வயதினிலே படம் ஹிட்டாக அமைந்ததால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஜோதிகா தற்போது, மகளிர் மட்டும் படத்தில் நடித்து வருகிறார் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, இதில் ஜோதிகா மாயாவி படத்திற்கு பின் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

இந்த படத்தை குற்றம் கடிதல் படத்திற்கு தேசிய விருது பெற்ற, இயக்குனர் பிரம்மா இயக்கி வருகிறார், இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துவருகிறார்.

மேலும் மனைவி ஜோதிகா நடித்து வரும் இந்த படத்திற்காக, சூர்யா தனது சொந்த குரலில் பாடல்  பாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!