புதிய கட்சி துவங்கிய அர்ஜுன மூர்த்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து! பரபரப்பு அறிக்கை!

By manimegalai aFirst Published Feb 27, 2021, 1:53 PM IST
Highlights

'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கும், அர்ஜுன மூர்த்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி இருக்கும், அர்ஜுன மூர்த்திக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக தெரிவித்த நிலையில்,  அவரது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக முன்னாள் நிர்வாகியான அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். ரஜினியுடன் இருக்கும் நட்புக்காகவே அவரது கட்சிக்கு வந்த அர்ஜுன மூர்த்தி தற்போது புதிய கட்சியை துவங்கியுள்ளார்.

தனது கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை  அர்ஜூன மூர்த்தி வெளியிட்டுள்ளார். அவர்கள் தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் 'இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' என வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இந்நிலையில் தன்னுடைய நண்பரான அர்ஜுன மூர்த்தி துவங்கியுள்ள கட்சிக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது... " இன்று தனி அரசியல் கட்சி துவங்கி இருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். 

தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்குவதால் இருந்து பின் வாங்கிய ரஜினிகாந்த் ஒருவேளை அரசியல் கட்சி துவங்கி இருந்தால், அர்ஜுன மூர்த்தி ரஜினியின் கட்சி பணிகளிலேயே ஈடுபட்டிருப்பர். "இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி" என்கிற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த கட்சி, வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!