பாடும் நிலா எழுந்து வா... எஸ்.பி.பி யின் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு விடுத்த ரஜினிகாந்த்..!

Published : Aug 20, 2020, 01:07 PM IST
பாடும் நிலா எழுந்து வா... எஸ்.பி.பி யின் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு விடுத்த ரஜினிகாந்த்..!

சுருக்கம்

ரஜினிகாந்த் பாடுநிலா எழுந்து வா... என கூறி, எஸ்.பி.பி யின் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென இன்று 6 மணி முதல் 6 :05 வரை கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அதற்கு திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கூட்டு பிராத்தனைக்கு அனைவரும் ஆதரவு கொடுத்து... எஸ்.பி.பி உடல் நலம் தேறி வர வேண்டும் என முழு மனதுடன் கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நிச்சயம் அவர் மீண்டும், உடல் நலம் தேறி வருவார் என இசைஞானி இளையராஜா, பாரதி ராஜா, ஏ.ஆர்.முருகதாஸ், ஜி.வி.பிரகாஷ் குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் தங்களுடைய ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் எஸ்.பி.பி.யின் உற்ற நண்பர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடுநிலா எழுந்து வா... என கூறி, எஸ்.பி.பி யின் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிமுதல் 6 :05 மணிவரை நடைபெற உள்ள இந்த கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்டு மீண்டும் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?