போட்றா பட்டாச...! ரசிகர்களுக்கு தனுஷ் தரவிருக்கும் "ச்சில் ப்ரோ!" சர்ப்ரைஸ்! சண்டே அன்று வெடிக்கப்போகும் முதல் பட்டாஸ்!

By Selvanayagam PFirst Published Dec 1, 2019, 12:18 AM IST
Highlights

நடிகர் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம், ஒருவழியாக வெள்ளிக்கிழமை முதல் வெற்றிகரமாக திரையில் பாய்ந்து வருகிறது. 3 ஆண்டு காலம் கழித்து வந்தாலும், இந்தப் படம் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 
 

இந்த வேளையில், மற்றொரு சர்ப்ரைசான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது தனுஷின் 'பட்டாஸ்' படக்குழு.
தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பட்டாஸ்'. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மெஹரின் பிர்சடா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

 'புதுப்பேட்டை' படத்திற்குப் பிறகு, தனுஷுடன் சினேகா இணைந்திருக்கும் படம் இது. 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகபிரம்மாண்டமாக உருவாகும் 'பட்டாஸ்' படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். 

வேகமாக தயாராகிவரும் இந்தப் படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ரிலீஸ் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், 'பட்டாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக், இன்று  (டிசம்பர் 1) மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தனுஷ் பாடியிருக்கும் "ச்சில் ப்ரோ" என்ற இந்தப் பாடலை, தனுஷே வெளியிடவுள்ளார் என்பதுதான் ரொம்பவே ஸ்பெஷல். 


இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை, பட்டாஸ் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங் செய்து சமூக வலைதளத்தை தனுஷ் ரசிகர்கள் அதிரவைத்து வருகின்றனர். விவேக்-மெர்வினின் இசைச் சரத்திலிருந்து முதல் வெடி ஞாயிற்றுக் கிழமை வெடிக்க உள்ளதால், இந்த சண்டே தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!