”நடிகர் சந்தானம் என்னை தாக்கி விட்டார்” - காவல்நிலையத்தில் புகார்...!

 
Published : Oct 09, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
”நடிகர் சந்தானம் என்னை தாக்கி விட்டார்” - காவல்நிலையத்தில் புகார்...!

சுருக்கம்

some one police complained on actor santhanam

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாஜக தென் சென்னை மாவட்ட துணை தலைவர் பிரேம் ஆனந்த் விஜயா என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் இன்று மதியம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், நடிகர் சந்தானத்திற்கும்  தனக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததாகவும் அதனால் அவர் தன்னை தாக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் புகார் அளித்த இவர் அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரேம் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!