செக்சுக்கு அழைத்த போது மறுத்த காரணத்தினால் எனது கணவர் என்னை கொலை செய்ய முயன்றதாக இந்தி பிக்பாஸ் நடிகை சோஃபியா ஹயாத் புகார் அளித்துள்ளார். பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் ரோமானியாவை சேர்ந்த விளாட் ஸ்டானெஸ்குவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கட்டிடங்களின் உள்வடிவமைத்து தொழிலை செய்துவந்த விளாட் ஸ்டானெஸ்குவை திருமணம் செய்வதற்கு முன், அவருடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்ற சோபியா ஹயாத், அவ்வபோது, கிலுகிலுப்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து இளைஞர்களை சூடேற்றி வந்தார்.
திருமணத்திற்கு பின்னரும் அவருடன் தனிமையில் இருந்த ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு கிலுகிலுப்பை ஏற்படுத்திய சோபியா ஹயாத், கடந்த சில வாரங்களுக்கு முன் கணவர் விளாட்டை பிரிந்துவிட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து விளாட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய சோபியா ஹயாத், அவர் ஒரு பொய்யன் என்றும் திருடன் என்றும் விமர்சித்தார். விளாட்டுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரிந்து இருந்தும், அவரை நான் ஏற்றுக் கொண்டேன் என்றும், அவரது அனைத்துச் செலவுகளையும் தானே செய்ததாகவும் சோபியா ஹயாத் தெரிவித்ததுடன், தன்மூலமே விளாட் பிரபலமானதாகவும் கூறினார்.