சினேகாவை உரித்து வைத்திருக்கும் மகள்! முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

By manimegalai aFirst Published Mar 9, 2020, 12:18 PM IST
Highlights

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.
 

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.

ஏற்கனவே சினேகா - பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில், சினேகா கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைதொடந்து தற்போது, முதல் முறையாக தன்னுடைய அழகிய மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு மகளிர் தினத்தன்று முதல்  காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. சினேகாவின் குழந்தை பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறது என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தையின் புகைப்படம் இதோ...
 

 

click me!