
நடிகர் சங்கத்தின் பிரச்சனைகள் இன்னும் தீராத பட்சத்தில், மேலும் புது புது பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது .
இந்நிலையில் தீடீர் என்று நடிகர் சங்க உறுப்பினர்கள் பதவியிலிருந்து சரத் குமார், ராதா ரவி ஆகியோரை நீக்கம் செய்கிறோம் என்று விஷால் கூறியது, பல திரையுலகினரை பெரும் அதிர்ச்சியாக்கியது.
இதற்கு ராதாரவி மற்றும் சரத்குமார் இருவரும் இனி நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் சட்டப்படி சந்திப்போம் என கூறினார் .
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தம்பி சிவகார்த்திகேயன் அழுதது எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தது. நாங்கள் பதவியிலிருந்தால் நிச்சயம் அவரை விட்டுக்கொடுக்கமாட்டோம். அவருக்காக போராடி கண்டிப்பாக நியாயம் வாங்கி தந்திருப்போம் என்றும், மேலும் அவருக்காக நான் இறங்கியிருப்பேன் என கூறினார்.
இதே போல் அன்று விஷால் லிங்குசாமி பிரச்சனைக்கு இருந்தபோது நான் விஷாலுக்காக வந்து பேசினேன் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் ராதாரவி .
ஆனால் இன்று வரை சிவாவின் அழுகைக்கு ஒரு செயலையும் விஷால் செய்யவில்லை இன்று சொல்லாமல் சொல்லி குத்திக்காட்டி இருக்கிறார் ராதாரவி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.