இந்திய அணியின் மகத்தான வெற்றி! இங்கிலாந்தில் கண்டு ரசித்த சிவகார்த்திகேயன் - அனிருத்!

By manimegalai aFirst Published Jun 17, 2019, 11:54 AM IST
Highlights

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய தினம், பல்வேரு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதிய உலக கோப்பை ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றைய தினம், பல்வேரு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியா - பாகிஸ்தான் அணி மோதிய உலக கோப்பை ஒரு நாள் போட்டி நடைபெற்றது.

இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடுவதை பார்க்க, பல கிரிக்கெட் ரசிகர்கள், இங்கிலாந்து சென்றனர். மேலும் பல பாலிவுட், கோலிவுட் பிரபலங்களும், இந்திய அணியின் விளையாட்டை நேரில் பார்ப்பதற்காக இங்கிலாந்து பறந்தனர்.

குறிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத், ஆகியோர், இங்கிலாந்திற்கு நேரடியாக சென்று, இந்திய அணியின் ஜெர்சி அணிந்தவாறு போட்டியை கண்டு ரசித்தனர். இந்த மகிழ்ச்சியை புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற பாகிஸ்தான் - இந்திய அணி மோதிய போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

click me!