லண்டன் சென்று திரும்பிய பிரபல பாடகிக்கு கொரோனா! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Published : Mar 20, 2020, 04:34 PM IST
லண்டன் சென்று திரும்பிய பிரபல பாடகிக்கு கொரோனா! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சுருக்கம்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் மூலமாகவே மற்றவர்களுக்கு பரவி வருகிறது.  

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் மூலமாகவே மற்றவர்களுக்கு பரவி வருகிறது.

சீனாவில் துவங்கி தற்போது மெல்ல மெல்ல... 125 க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உள்ளது கொரோனா. மேலும் இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் லண்டன் சென்று திருப்பிய பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மனதை கவரும் விதமாக பல பாடல்களை பாடி, பிரபலமான கனிகா கபூர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!