சக உயிராய் எண்ணாமல் சாதிமட்டும் பார்ப்பீரோ...நத்தமேடு வன்முறையைக் கண்டித்து பிரபல பாடகர் எழுதிய கவிதை...

Published : Apr 20, 2019, 09:14 AM IST
சக உயிராய் எண்ணாமல் சாதிமட்டும் பார்ப்பீரோ...நத்தமேடு வன்முறையைக் கண்டித்து பிரபல பாடகர் எழுதிய கவிதை...

சுருக்கம்

இச்சம்பவங்களுக்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், தனது முகநூல் பக்கத்தில், படிப்பவர்களை உலுக்கி எடுக்கும் கவிதை ஒன்றை பதிவிட்டிட்டிருக்கிறார் பிரபல பாடகரும், இளையராஜா இசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞருமான அருண்மொழி என்கிற நெப்போலியன் செல்வராஜ்.  

’பொன்பரப்பியின் வெப்பம் தணிவதற்குள் கொழுந்து விட்டு எரிகிறது, நத்தமேடு. பா.ம.கவிற்கு வாக்களிக்காத ஒரு தலித் இளைஞனை அடித்திருக்கிறார்கள்.  பதட்டமான வாக்குச்சாவடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நத்தமேடில் பாமகவினரின் பேச்சை கேட்டு கேமரா கூட முறையாக பொருத்தாமல் இருந்தது,சாதி வெறிக்கும் அநீதிக்கும் துணை போகிறதா தேர்தல் ஆணையம்?’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கொந்தளித்து வருகின்றனர்.

இச்சம்பவங்களுக்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பிவரும் நிலையில், தனது முகநூல் பக்கத்தில், படிப்பவர்களை உலுக்கி எடுக்கும் கவிதை ஒன்றை பதிவிட்டிட்டிருக்கிறார் பிரபல பாடகரும், இளையராஜா இசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞருமான அருண்மொழி என்கிற நெப்போலியன் செல்வராஜ்.

கதவில்லா வாயிலுக்குள்
களவாடற் கொன்றுமிலை
இல்லாமை நடனமிடும்
இவர்மேலா வன்மநிலை!

மெய்குலுங்க அழுகின்றார்
கையேற்றித் தொழுகின்றார்
சக உயிராய் எண்ணாமல் 
சாதிமட்டும் பார்ப்பீரோ

உன்னைப்போல் அவருடலும்
தசையெலும்பு உதிரமென்று
ஆனதுதான் புரியாதா
உன்தாயாய் தெரியாதா

உடையில்லா பாவிமகள்
உடமைகளைத் தூளாக்கி
பெற்றினயோ இன்பம் உனைப்
பற்றட்டும் பெருங்குன்மம்
☹️☹️☹️☹️

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....