காதலர்களின் பாதுகாவலராக மாறிய சமுத்திரக்கனி!

By manimegalai aFirst Published Apr 19, 2019, 8:27 PM IST
Highlights

ஒரு படத்தின் தரத்தை அந்த படத்திற்கு செலவு செய்யப்படும் பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அந்த படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும்.
 

ஒரு படத்தின் தரத்தை அந்த படத்திற்கு செலவு செய்யப்படும் பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அந்த படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும்.

அப்படி சமத்துவத்தை தாங்கி நிற்கும், சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனியின் நடிப்பில், 'பற' படம் உருவாகியிருக்கிறது என்கிறார் அந்தப் படத்தின் இயக்குனர் கீரா.

இவர் 'பற' படம் பற்றி கூறுகையில்....  படத்தில் காதலர்களின் பாதுகாவலராக சமுத்திரகனி நடித்திருக்கிறார். சாந்தினி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். வாழும்போது வன்மமும், குரோதமும், இல்லாமல் வாழ வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது இப்படம்.

அதோடு ஏற்றத்தாழ்வு, ஜாதி ஒழிப்பு மற்றும் ஆணவக்கொலை போன்றவற்றிக்கு தீர்வு, ஆகியவற்றை சமுத்திரகனியின் கதாபாத்திரம் மூலம் சொல்லி இருக்கிறோம். விரைவில் 'பற' திரைக்கு வரும் என கூறியுள்ளார் கீரா.

click me!