பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்காக மகத் செய்த செயல்! அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

Published : Nov 04, 2018, 02:16 PM IST
பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்காக மகத் செய்த செயல்!  அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தாக்கம் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் டல் அடித்தாலும், இந்த நிகழ்ச்சி சற்று பிரச்சனைகளோடு போக காரணமாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தாக்கம் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் டல் அடித்தாலும், இந்த நிகழ்ச்சி சற்று பிரச்சனைகளோடு போக காரணமாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் புதிய படங்களில் கமிட் ஆவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் முதல் சீசன் போட்டியாளர்களை காட்டிலும் இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கு பெரிதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே ஒரு பேச்சும் அடிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது இவருடைய  பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என எண்ணிய ஐஸ்வர்யாவின் நண்பரான மகத், சிம்பு மற்றும் அனிரூத் ஆகியோருடன் ஐஸ்வர்யாவின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே, மகத் மூலம் சிம்புவுக்கு நன்கு அறிமுகமான ஐஸ்வர்யாவை அடுத்த படத்தில் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருவதாக தகவலை, தொடர்ந்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் அதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!