‘ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு’... வெங்கட் பிரபுவின் தாயார் மறைவிற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்த சிம்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 10, 2021, 7:54 PM IST
Highlights

தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே சிம்பு வெங்கட் பிரபுவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரனின் மனைவியும், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 11 :30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். 

தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே சிம்பு வெங்கட் பிரபுவின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை... எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும்.. இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு.  அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்... வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

click me!