
தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அதற்கு முதல் நாள் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார். எனவே விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்பது போல் மன்சூர் அலிகான் அளித்த அவதூறு பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மன்சூர் அலிகானுக்கு சமீபத்தில் தான் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய சிறுநீரக கல்லை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து மன்சூர் அலிகானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. a
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.