தன்னை கேவலப்படுத்திய இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்கும் சிம்பு...! இவ்வளவு பெருந்தன்மையா...?

First Published Apr 27, 2018, 2:16 PM IST
Highlights
simbu again acting with adhik ravichandran direction


நடிகர் சிம்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' இந்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. 

மேலும் இந்த திரைப்படம் தோல்வியடைய முக்கிய காரணம் சிம்பு தான் என்றும் அவர், சரியான நேரத்திற்க்கு படப்பிடிப்பிற்க்கு வராமல் இருந்ததால் தான் நினைத்தப்படி இந்த படத்தை இயக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ஆதிக் சிம்பு மீது பல்வேறு புகார்களை அடுக்கினார். இதனால் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சிம்புவுடன் தற்போது ஆதிக் சமாதானம் ஆகி விட்டதாகவும், விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியின் மூலம் உறுதிசெய்துள்ளார்.

இது குறித்து ஆதிக் கூறுகையில் சிம்புவுடன் 'AAA' படம் இயக்கும்போது புரிதல் இல்லாமல் இருந்தது உண்மைதான் என்றும், இப்போது இருவரும் அடிக்கடி பேசி கொள்வதாகவும், தற்போது சிம்புவிற்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் ஆதிக் பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் நடிகர் ஜி.வி பிரகாஷை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!