14 நாள் தனிமை முடிந்தது! இப்போது அம்மவுடன் செம்ம பிஸி... குஷியில் நேர்கொண்ட பார்வை நாயகி ஷ்ரத்தா!

Published : Apr 02, 2020, 01:35 PM IST
14 நாள் தனிமை முடிந்தது! இப்போது அம்மவுடன் செம்ம பிஸி... குஷியில் நேர்கொண்ட பார்வை நாயகி ஷ்ரத்தா!

சுருக்கம்

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும்  சென்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், வீட்டின் உள்ளேயே அவர்கள் தனிமையில் இருக்கும் படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.  

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கும் , வெளிமாநிலங்களுக்கும்  சென்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், வீட்டின் உள்ளேயே அவர்கள் தனிமையில் இருக்கும் படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீதான், படப்பிடிப்பிற்காக அடிக்கடி, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு அதிக விமான பயணம் செய்துள்ளார். 

மேலும் இவர் சென்று வந்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு,  கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது தெரியவந்ததை அடுத்து  நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தையும், கர்நாடகாவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரிகள் வீட்டின் உள்ளேயே தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஷ்ரத்தா ஸ்ரீநாத்  தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டார்.  

தற்போது அவர்கள் சொல்ல 14 நாட்கள் மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து ஷ்ரத்தா தற்போது தன்னுடைய அம்மாவுடன் கிச்சனில் பிசியாக இருப்பதாக குஷியாக ட்விட் செய்து, அனைவரையும் பாதுகாப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!