கெளதமி தனது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்; கமலஹாசன்

First Published Jun 12, 2018, 6:31 PM IST
Highlights
she done her job and left says famous Tamil star about this actress


நடிகர் கமலஹாசனும், நடிகை கெளதமியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர், அதன் பிறகு சில காரணங்களால் பிரிந்துவிட்டனர். இவர்களின் பிரிவிற்கு பிறகு கெளதமி கமலஹாசனை மிக கடுமையாக பல முறை விமர்சித்திருக்கிறார். தனக்கு கமல் மீது இருந்த கோபத்தை முடிந்த அளவிற்கு வெளிப்படுத்திய, அவர் தற்போது கமலின் ”விஸ்வரூபம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றி இருக்கிறார்.

கமலும் கெளதமியும் பிரியும் முன்னர் வரை, இருவரும் இணைந்தே பல படங்களில் பணியாற்றி வந்தனர். கமலின் எல்லா திரைப்படங்களிலும் கெளதமியின் ஏதேனும் ஒரு சிறிய பங்களிப்பாவது இருக்கும். அப்படி தான் விஸ்வரூபம் திரைப்படத்தின் முதலாம் பாகத்தில், ஆடை வடிவமைப்பினை கெளதமி பொறுப்பெடுத்திருந்தார்.

அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்போது விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், கெளதமி தான் ஆடை வடிவமைப்பை செய்திருக்கிறார். இது குறித்து பேசிய கமலஹாசன், கெளதமி தனது வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். என பாராட்டி இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரும் மிகவும் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கின்றனர். நாசர் மிக சிறப்பக நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா ஜெரேமியா, பூஜா குமார் போன்றோர் தங்கள் கதாப்பாத்திரத்தை நன்றாக செய்திருக்கின்றனர். எனவும் பாராட்டி இருக்கிறார் கமலஹாசன்.

click me!