பிக்பாஸுக்காக கண்டிப்பாக இதை நான் செய்வேன்; தானாக தலையை கொடுக்கும் சீரியல் நடிகர் அமித் பார்கவ்

 
Published : May 17, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
பிக்பாஸுக்காக கண்டிப்பாக இதை நான் செய்வேன்; தானாக தலையை கொடுக்கும் சீரியல் நடிகர் அமித் பார்கவ்

சுருக்கம்

serial actor expressed his willing to participate in big boss 2

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு விஜய் டிவியின் டிஆர்பி-ஐ, உச்சத்துக்கே கொண்டு சென்ற ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் பெரும்பாலானோர், தங்களுக்கு என சமுதாயத்தில் இருந்த பெயரை கெடுத்து கொண்டனர் என்பது தான் உண்மை. ஓவியா மற்றும் பரணி போன்றோர் தங்களின் யதார்த்தமான குணத்தால் புகழின் உச்சியை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக் பாஸ் சீசன் 2 மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. முன்பு போலவே இம்முறையும் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார், என்பது முதல் பிரமோவின் மூலம் தெரிந்துவிட்டது.

ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போகும் பலி ஆடுகள் யார்? யார்? என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமடைந்த, நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொள்ள என்னை அழைத்தால், கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன். என கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் பேரை கேட்டாலே ஓடி ஒளியும் பிரபலங்களுக்கு மத்தியில், இந்த பச்ச மண்ணு தானா வந்து தலையக்குடுக்குதே….. என அவரின் ரசிகர்கள் இப்போதே புலம்ப தொடங்கிவிட்டனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!