வருத்தப்பட வைத்த பன்னீர் செல்வம்....உண்மைக்கும், உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள் - சரத்குமார் கருத்து...!!!

 
Published : Feb 08, 2017, 02:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
வருத்தப்பட வைத்த பன்னீர் செல்வம்....உண்மைக்கும், உழைப்பிற்கும் மதிப்பு கொடுங்கள் - சரத்குமார் கருத்து...!!!

சுருக்கம்

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், தற்போது அரசியலில் நிலவி வரும் மாற்றங்கள் வேதனை அளிப்பதாக கூறி தனது முகநூல் பக்கத்தில் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்...

அதில் அவர் கூறுகையில் தமிழகத்தின் பேரியக்கம், இந்திய அரசியல் களத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் அஇஅதிமுகவின் தற்போதைய நிலை வேதனையளிக்கிறது.

புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த பேரியிக்கம் பிளவு படாமல் இருப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை எனது முந்தைய அறிக்கையில் பாராட்டி இருந்தேன். முக்கியமாக திரு பன்னீர்செல்வம் அவர்களே முன்மொழிந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தேன்.

தான் பொறுப்பேற்ற முதல்நாள் முதல் சிறப்பாக செயல்பட்ட திரு பன்னீர்செல்வம் அவர்கள் கட்டாயப்படுத்தப் பட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது அவரின் உண்மைக்கும் உழைப்பிற்கு மதிப்பளித்து அவரின் எண்ணங்களுக்கு வழிவகுத்து, ஒன்றுபட்டு புரட்சித்தலைவி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீண்டும் சிறப்பான முறையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து செயல்களையும் உடனடியாக செய்யவேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ