மறக்க முடியாத நாளாக மாறிய பிப்ரவரி 7....அன்று எனக்கு.... இன்று இவருக்கு.... சூசகமாக கூறிய கமல்...!!!

 
Published : Feb 08, 2017, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
மறக்க முடியாத நாளாக மாறிய பிப்ரவரி 7....அன்று எனக்கு.... இன்று இவருக்கு.... சூசகமாக கூறிய கமல்...!!!

சுருக்கம்

நேற்று முதலமைச்சர் பன்னீர் செல்வதால் நிகழ்ந்த மாபெரும் மாற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியது. இவ்வளவு நாட்கள் மெளனமாக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று தான் பட்ட அவமானங்களை ஊடகங்கள் முன் போட்டு உடைத்தார்.

இதனை குறிப்பிட்டு இதே பிப்ரவரி 7ம் தேதியில் கமல்  வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்த தருணத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

அது என்னவென்றால் விஸ்வரூபம் படத்தை வெளியிட அவர் எவ்வளவு கஷ்டபட்டார் என அனைவருக்கும் தெரியும். பிப்ரவரி 7 - இதே நாளில் தான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பெரிய பிரச்னையை சந்தித்தது.

இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல், 'மக்களின் அன்பு மட்டும் இருந்தால் எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று இதே  தேதியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார், இதனால் மக்கள் ஆதரவு இவருக்கு கிடைத்தால் கண்டிப்பாக இந்த சூழலை இவர் முறியடிப்பார் என சூசகமாக கூறியுள்ளார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ