அச்சச்சோ.. ஷூட்டிங்கின் போது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து- நடிகை சமந்தா நீரில் மூழ்கியதால் பதறிப்போன படக்குழு

By Asianet Tamil cinemaFirst Published May 24, 2022, 8:29 AM IST
Highlights

Samantha : குஷி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக படக்குழு நேற்று அறிவித்தது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார். விஜய் நிர்வாணா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இருவரும் பங்கேற்று நடித்தனர்.

இந்நிலையில், குஷி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விபத்தில் சிக்கி உள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கி உள்ளனர். அப்போது அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் பைக்கில் கடந்து செல்வது போன்ற சீனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

அப்போது எதிர்பாரா விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன படக்குழு உடனடியாக விரைந்து இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து சமந்தாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. 

இருவருக்கும் சற்று வலி அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் குணமாகி உள்ளனர். நேற்று குஷி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... சித்ரா இறந்த பின் 11 பெண்களுடன் உல்லாசம்... பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் - வெளியான பகீர் தகவல்

click me!