
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், முதல் முறையாக சமந்தா... நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருவது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்தில், 'நானும் ரௌடி' தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், கூடுதலாக இந்த படத்தில் மற்றொரு முன்னணி நடிகையான சமந்தாவும் நாயகியாக நடிக்கிறார்.
இரண்டு நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முடிவடைந்த நிலையில், திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஹைதாராபாத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயனதாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது குறித்து, அண்மையில் பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளார். அப்போது இருவருடனும் நல்ல நடிப்பை பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் நயன் - சாம் இருவரும் பெரிய நடிகைகளாக இருந்தாலுமே, ஷூட்டிங் ஸ்பாட்டில் நல்ல நட்புடன் பழகி வருவது தெரியவருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.