கார்த்தியிடம் காதலை சொல்லச் சென்ற ரேவதி.. நடந்தது என்ன?

Published : Jul 08, 2025, 04:24 PM ISTUpdated : Jul 09, 2025, 08:31 AM IST
Karthigai Deepam 2 Serial

சுருக்கம்

மனசாட்சி சொல்வதைத் கேட்டு கார்த்தியிடம் காதலை சொல்லச் சென்ற ரேவதி, காதலை சொல்லாமல் திரும்ப வந்துவிட்டார்.

Zee 5 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம். அதற்கு முன்னதாக இந்த சிரியலை ஜி5 ஆப்பில் பார்க்கலாம். அதற்கு நாம் பனம் கட்ட வீேண்டும். இந்த சீரியலின் எபிசோடில் ரேவதியால் சந்திரகலா வீட்டுக்கு நடந்தே வந்த நிலை ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் கார்த்திக்.

தனது அத்தை மகன் தான் கார்த்திக் என்பது தெரியாமல் ரேவதி அவரை கல்யாணம் கட்டிக் கொண்டார். அதன் பிறகு உண்மை தெரிந்து அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் காதலை சொல்லவில்லை. இன்று மனசாட்சியின் அட்வைஸ் படி காதலை சொல்ல முயன்றார். கடைசி வரை சொல்லவில்லை. எனினும் அவரை காதலிப்பது உண்மை தான். கார்த்தியை காப்பாற்ற ரேவதி சாமி எல்லாம் ஆடினார். அதில் சாந்திரலேகாவிற்கு பதிலடி கோொடுத்தார்.

அதாவது, சந்திர கலா ரேவதியை கூபட்டு எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்துட்டியே என்று பேச ரேவதி எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல என்ன நடந்துச்சு என்று ஒன்றும் தெரியாது என நடித்து நிலைமையை சமாளிக்கிறாள்.

அதைத்தொடர்ந்து சந்திர கலா கார்த்திக்கை சந்தித்து என்ன கார்த்திக் ராஜா உங்க டபுள் முகத்தை எப்படி சமாளிக்கிறீங்க என்று கேள்வி கேட்டு கூடிய சீக்கிரம் நீங்கள் மாட்டுவீங்க என்று எச்சரிக்கிறாள்.

இதையடுத்து பரமேஸ்வரி பாட்டி ரேவதியை பார்த்து அபிராமியின் தாலியை கொடுக்க ரேவதியும் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சாமியிடம் வீேண்டிக் கொள்கிறாள்.

அதன் பிறகு ரேவதியின் மனசாட்சி அவள் முன் தோன்றி கார்த்தியிடம் காதலை சொல் என்று சொல்ல ரேவதி தனது காதலை சொல்ல பேச்சு வராமல் தவிக்கிறாள் 

பிறகு ரேவதி ரூமுக்கு வந்துவிட மீண்டும் அவள் முன் தோன்றும் மனசாட்சி இதுதான் காதலை சொல்றதா என்று கேள்வி கேட்க ரேவதி இந்த முறை கண்டிப்பாக சொல்லி விடுகிறேன் என்று சொல்கிறாள்.

அதைத் தொடர்ந்து இளையராஜா பாடுவதற்காக ஒருவரை ஏற்பாடு செய்ய சொல்லி கேட்க கார்த்திக் சுவாதியை பாட சொல்லி சென்னைக்கு அழைத்துக் கொண்டு கிளம்புகிறான். சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் கார்த்தி ரேவதி மற்றும் சுவாதி ஆகியோர் கிளம்பி வர சந்திரகலா இவர்களை தடுத்து நிறுத்துகிறாள்‌.

எங்க போறீங்க என்று கேட்க சென்னை போவதாக சொல்கின்றனர். சுவாதியும் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று சொன்னதால கூட்டிட்டு போறோம் என்று சமாளிக்கின்றனர். சந்திரகலா நானும் வரேன் என்று ஷாக் கொடுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?