போர் வீராங்கனையாக மாறிய ராதிகா..! ஏன் தெரியுமா..?

Asianet News Tamil  
Published : May 30, 2018, 06:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
போர் வீராங்கனையாக மாறிய ராதிகா..! ஏன் தெரியுமா..?

சுருக்கம்

rathidha acting new seriyal for chandrakumaari

தமிழ் ரசிகர்கள் மனதில், கதாநாயகியாக அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் நடிகை ராதிகா. எப்போது தயாரிப்பு, அரசியல், நடிப்பு என தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ளும் இவர், பல வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில், தன்னுடைய தயாரிப்பிலேயே சீரியல் தயாரித்து, அதில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்து இது வரை வெளியாகியுள்ள, 'அண்ணாமலை', 'சித்தி', 'வாணி ராணி' உள்ளிட்ட சீரியல்கள் ஒவ்வொன்றும் மூன்று வருடங்களை கடந்து ஒளிபரப்பானவை. இவர் நடிக்கும் சீரியல்களை மிஸ் பண்ணாமல் பார்க்கும் பல ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் விரைவில் 'வாணி ராணி' சீரியல் முடிவடைய உள்ளது. இந்த சீரியலை தொடந்து ராதிகா வரலாற்று சிறப்பு மிக்க, பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள தொடரில் நடிக்க உள்ளார். 'சந்திரகுமாரி' என்று பெயரிடப் பட்டுள்ள இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்புகள் படு வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

"பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்