
தமிழ் சினிமாவில் ஒரே கதை கொண்ட படங்கள் இடைவெளி விட்டு எடுக்கப்படுவது இயல்பாகி விட்டது. ஆனால் ஒரே நேரத்தில் சில முன்பின் ஒரே கதையை கொண்ட படங்கள் உருவானால்..? அதுவும் ரஜினி நடித்த படக்கதையை ஒட்டியே அஜித் நடித்து வரும் படக்கதையும் எடுக்கப்பட்டால்..? இது என்ன புதுவிவகாரம்.
புது விவகாரமேதான். வலைமை பட இயக்குநர் ஹெச்.வினோத் மனதில் இப்படியொரு கவலை ஆட்டிப்படைத்து வருகிறதாம். யெஸ்... ரஜினியின் தர்பார் கதையும் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வலிமை கதையும் ஒன்றுதான் என்கிற சந்தேகம் வந்துவிட்டதாம். காரணம் வலிமை படத்திலும் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி. இரண்டு படங்களின் பின்னணியும் மும்பையை கதைக்களமாக கொண்டது.
இருபடங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் ஒரு சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன. அதற்காக ஷுட்டிங்கை நிறுத்தி விடவா முடியும்? அஜீத்தை வைத்து பில்டப் காட்சிகள், சண்டை காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஹெச்.வினோத். மெயின் கதைக்குள் போக வேண்டும் என்றால், தர்பார் படம் ரிலீசாகி அவரது சந்தேகம் தீர வேண்டும். ஆக, தர்பார் ரிலீசுக்காக காத்திருக்கும் லட்சோப லட்சம் பேரில் இயக்குநர் ஹெச்.வினோத்தும் ஒருவராகி விட்டார்.
ஹெச்.வினோத்தின் நடுக்கத்திற்கு காரணம் தர்பார் படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் ஆயிற்றே... பயம் இருக்காதா பின்னே..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.