மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு; படம் சிறப்பாக இருந்துச்சாம்…

 
Published : Oct 23, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மெர்சல் குழுவிற்கு ரஜினி பாராட்டு; படம் சிறப்பாக இருந்துச்சாம்…

சுருக்கம்

Rajini congratulates Mersal team The film is special

பல தடைகளைத் தாண்டி கடந்த தீபாவளியன்று வெற்றிகரமாக திரைக்கும்வந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல்.

அரசியல்வாதி ஒருவர் படத்தில் ஜி.எஸ்.டி குறித்த காட்சிகளை நீக்க சொன்ன அடுத்த நொடி படத்தின் புரோமோசன் இந்தியா முழுக்க பரவியது. டிவி விவாதங்கள் என மெர்சல் ஹேஷ்டாக் டிவிட்டியது.

மெர்சல் படத்தை பார்க்க கூடாது என வைராக்யமாக இருந்தவர்களை கூட அந்த அரசியல்வாதியின் கருத்து தூண்டிவிட்டு மெர்சலை பார்க்க வைத்துள்ளது.

பத்து பைசா செலவில்லாமல் ஒத்த வார்த்தையால் பப்ளிசிட்டி தேடித் தந்த அந்த அரசியல்வாதிக்கு நன்றி சொல்லி மீம்ஸ் கூட வெளியிட்டனர் தளபதி ரசிகர்கள்.

இந்த நிலையில், இந்தப் படத்தைப் பாராட்டி நடிகர் ரஜினி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு: “மிக முக்கிய பிரச்சனையைப் படத்தில் பேசியுள்ளார்கள், சிறப்பாக உள்ளது! மெர்சல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் மெர்சலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஆனால், ஜி.எஸ்.டி என்ற அந்த வார்த்தையை கூட சொல்லாமல் முக்கிய பிரச்சனை என்று குறிப்பிட்டு இருப்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!