ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கிறார் “ராணா டகுபதி” அதாங்க “பல்வாள்தேவன்”…

Asianet News Tamil  
Published : May 17, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கிறார் “ராணா டகுபதி” அதாங்க “பல்வாள்தேவன்”…

சுருக்கம்

Rajas murder case is investigated by Rana Takupati and Balthaludevan

ராணா டகுபதி தனது அடுத்த படத்தில் சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தாண்டு நடிகர் ராணாவுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளியான ’காசி அட்டாக்’ வெற்றியடைந்தது மட்டுமின்றி, ’பாகுபலி 2’ படம் செம்ம ஹிட்டு. இதனால் தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலிருந்தும் ராணாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

இந்த நிலையில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்த படம் ஒன்று பாலிவுட்டில் தயாராக உள்ளது.

இந்த படத்தில் வழக்கை விசாரணை செய்யும் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்க ராணாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கை சிபிஐ அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான கார்த்திகேயன் என்பவர் விசாரணை செய்தார். எனவே அவர் கதாபாத்திரத்தில் நடிக்க ராணா நடிப்பது பொறுத்தமாக இருக்கும் என படக்குழுவினர் நினைக்கின்றனராம்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!