முழு கதையை 'பொட்டுக்குள்' மறைத்த ராஜமௌலி... 

 
Published : May 13, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
முழு கதையை 'பொட்டுக்குள்' மறைத்த ராஜமௌலி... 

சுருக்கம்

rajamouli revel the movie story for hindhi

பாகுபலி 2 திரைப்படம், தற்போது 1500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த படத்திற்காக, இயக்குனர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினரை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தம்முடைய முழு படத்தில் கருவையும் பொட்டிலேயே வெளிப்படுத்தியுள்ளார் ராஜமௌலி... இதை நீங்கள் கவனித்தீர்களா...?

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராணாவிற்கு சுட்டெரிக்கும் "சூரியன்" வடிவில் உள்ள பொட்டு வைக்கப்பட்டிருக்கும்.

இது பல்வாள் தேவன் " என்கிற கதாபாத்திரம் எப்போதும் சூரியன் போல், எரிந்து கொண்டே  கோபமாக  இருக்கும் ஒருவன் என்பதை விளக்கும் விதமாக இருக்கும்.

அதே போல அமரேந்திர பாகுபலிக்கு "நிலா" வடிவில், பொட்டு வைக்கப்பட்டிருக்கும்... இது அவர் எப்போதும் நிழல் மற்றும் குளுமையை தரும் நிலா போல் அன்பானவர். பொறுமையானவர் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும்.

மேலும் தந்தையை கொன்று, தாயை காப்பாற்ற வரும் மகேந்திர பாகுபலிக்கு "பாம்பு" வடிவில் பொட்டு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு பாம்பு பழிவாங்க வருவது போல் தன்னுடைய தந்தைக்காகவும், தாயிற்காகவும் வருகிறார் என்பது போல் உள்ளது.

இந்த பொட்டுகள் மூலமே படத்தில் முழு கதையும் வெளிபடுத்தியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!